நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தை முன்னிட்டு அக்கழகத்தினால் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கான முன்னோடி பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளை நினைவு சின்னம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டும் நிகழ்வு ஒலுவில் பரன்தோட்ட வளாகத்தில் கழகத்தின் தலைவர் அஷ்ரப் பாலாஹி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐலீல், எம்.என்.எம்.றணீஸ் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா மற்றும் மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எல்.எம்.றஜாப்டீன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களான யாக்கூப் எஸ். ஹசன், வை.ஏ.மனாப் மற்றும் ஆசிரியர் ஏ.எல். எம். பஸ்மீன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.