-நூருல் ஹுதா உமர்-
கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரம்புகள், பித்தளை மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேன்பாட்டு இராஜாங்க அமைச்சினால் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவின் விதாதா வளநிலையத்தின் வினை முயலுனர்களுக்கான தொழிநுட்பசார் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், கணக்காளர் ஜெயசர்மிகா காரைதீவு விதாதா வளநிலைய உத்தியோகத்தர் எல். எம். அஸ்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.