நூருல் ஹுதா உமர்
நிந்தவூரின் பெருமையை சர்வதேசம் வரை ஒலிக்கச் செய்து கொண்டிருக்கும் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழக கபடி அணி வீரர்கள் தேசிய கபடி சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட செய்தியை கேள்வியுற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மதீனா வீரர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி கௌரவித்துள்ளார்.