(சியாத் எம். இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றா நோய் மற்றும் சுகாதாரக் கல்வி, சுகாதார மேம்பாடு பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடந்த 05 வருடங்களாக பணியாற்றி, கொலன்னாவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்
டாக்டர் எஸ்.எப். மப்றூஹா அவர்களை பாராட்டிக்கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் டாக்டர் ஏ.சீ.அப்துல் றசாக் தலைமையில் வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத். எம். ஹனிபா கலந்து கொண்டு ஞாபகச் சின்னமொன்றை வழங்கிவைத்ததுடன், நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டொக்டர்.எம்.எச்.எம். சனூபர், செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ் மற்றும் தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாய், நலன்புரிசங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.