உள்நாடு | மருத்துவம் | 2022-01-04 16:48:17

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைக் கூடம் திறந்து வைப்பு

(சியாத் .எம்.இஸ்மாயில்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வாய் முகத் தாடை சத்திரசிகிச்சை மற்றும் கமரா தொழிநுட்ப சத்திர சிகிச்சைக்காக   தனியான சத்திர சிகிச்சை கூடம்  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அசாத் எம் ஹனிபா  அவர்களினால் நேற்றுமுன்தினம்  (01) திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் எம்.என்.என்.எம் சஹீர், வாய் முகத் தாடை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் விராஜ் ஐயசிங்க , பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர். றிப்ஷான் ஜமீல், மகப்பேற்று பெண்ணோயியல் வைத்திய நிபுணர் டாக்டர். யுரேகா விக்ரமசிங்க, சிறுபிள்ளை நோய் மருத்துவ  வைத்திய நிபுணர் டாக்டர். எஸ்.எம். அஷ்ஹார் உட்பட வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஷேடமாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அசாத்,எம். ஹனிபாவினால்  சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு தேவையான வீடியோ லாரிங்கோஸ்கோப், சத்திரசிகிச்சையின்போது நோயாளியின் உடல் வெப்பநிலையை பேணும் வோமர் மற்றும் என்டஸ்கோப் பிரிவிகிற்கான இமேஜ் பிரின்டிங் சிஸ்டம் என்பன ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts