அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர், உடமைகளை இழந்த மக்களுக்கான இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (23) பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஏ.எல் பைஸாத் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன் அவர்கள் கலந்துகொண்டு
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 65 லட்சம் ரூபாய் காசோலைகளை வழங்கிவைத்துள்ளார்.