உள்நாடு | சமூக வாழ்வு | 2021-12-22 13:03:21

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் முழு கொள்ளளவை இணைக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.  அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என அவர் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts