2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும், அடுத்தாண்டு அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.