உள்நாடு | குற்றம் | 2021-12-08 10:01:42

​​​​மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ்)

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று (08.12.2021) கரை ஒதுங்கிய நிலையில் கரைவலை மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கரை வலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.​ இதன்போது,​  அடையாளம் காணமுடியாத நிலையில் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டன.

நீண்ட நாட்களாக கடலில் கிடந்த நிலையில் உடல் பாகங்கள் அழகி உருக்குலைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கரை ஒதுங்கியுள்ள இந்த சடலம் தொடர்பான விசாரணைகளை தற்போது கல்முனை பொலிஸார் முன்னெடுத்து​ வருகின்றனர்.​


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts