உள்நாடு | சமூக வாழ்வு | 2021-11-30 12:56:26

நாடு மீண்டும் முடக்கப்படுமா?

தற்போதைய நிலைமையில் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பார்க்கும்போது எதிர்காலத்திலும் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts