உள்நாடு | கல்வி | 2021-10-17 11:33:25

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள மாணவிகள் விண்ணப்பப் படிவங்களை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதி கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts