-பொத்துவில் நிருபர்- எம்.ஏ.தாஜகான்-
கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் பொத்துவில் பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் அவர்களின் ஏற்பாட்டில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் கிராமிய கைத்தொழில் முயற்சியாளர் ஒருவரை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமான இரண்டு நாள் (2021.09.30, 10.01) பயிற்ச்சிப்பட்டறை நேற்றும் , இன்றும் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய தொழின் முயற்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்துருவன் அநுரத்த , திட்டமிடல் பணிப்பாளர் அனீஸ், நிர்வாக உத்தியோகத்தர் சுபைர், திட்டமிடல் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் வாசித், ஆகியோர்கள் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விரண்டு நாட்களும் இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராக . மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் லாகுகள பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் , மாஸ்டர் ரெயினர் ,தொழில் வழிகாட்டல் ஆலோசகர் , நூர்தீன் முகம்மட் ஜகுபர் அவர்கள் சிறந்த முறையில் பயனாளிகளுக்குப் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
பங்குபற்றிய பயனாளிகளுக்கு அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டு தொழில் முயற்சியாளராக எதிர்காலத்தில் மிளிர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.