-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத்திணைக்களம் இடைநிறுத்தப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்கள் நடை முறையை நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கத்தீர்மானித்துள்ளது.
கொவிட் 19 பரவலைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த வாகனஙகளுக்கான அனுமதிப்ப்த்திரங்கள் வழங்கும் நடை முறையை நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை மீள ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களையும் ஆணையாளர் வ.ரவீந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.