-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
ஜே.ஜே நிறுவனத்தினால் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலுள்ள சில உலமாக்களுக்கு கொவிட் -19 நிவாரண உதவித்தொகை இன்று வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஸ் ரஹ்மதுல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க ஜே.ஜே நிறுவனத்தின் தலைவர் சமூக சேவையாளர் ஐ.வை.எம்.ஹனீபின் அனுசரணையில் இவ் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.தெரிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல் மெளலவிகள் மற்றும் முஅத்தின்களுக்கே இவை வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் கிழக்கு இளைஞர் அமைப்பின் பிரதி தலைவர் எம்.சம்சித் உட்பட உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்