-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தின வைபவம் இன்று பொத்துவில் அருகம்பையில் அமைத்துள்ள புளூவ் வேவ் ஹோட்டலில் இலங்கை சுற்றுலா மன்றத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்துகொண்டார். கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் சிறப்பு அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலாளர் அனுருத்த சந்துருவன் , பொத்துவில் பிரதேச செயலக உதவி செயலாளர் எம்.ஐ.. பிர்னாஸ், கடற்படை கட்டளை தளபதி ஜெயந்த கமகே, ஜயங்க விஜயா ரத்தன, பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் பொத்துவில் மற்றும் லாஹுகல பிரதேச அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்த கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மகளிர் கடல் அலை கழக அமைப்பின் வீரங்கனைகள், சுற்றுலா ஊழியர்கள், சுற்றுலாத்துறை முச்சக்கரவண்டி சங்கத்தினர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.