-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் 'சௌபாக்கிய' தேசிய வேலைத்திட்டம் சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக தற்போது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நற்பிட்டிமுனை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட சமூர்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கறவை இன பசு மாடுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (23.09.2021) மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி, சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பசுக்களை வழங்கி வைத்தார்.