உள்நாடு | சமூக வாழ்வு | 2021-09-22 15:43:49

லாகுகல பிரதேச செயலாளராக நவநீதராஜா கடமையை பொறுப்பேற்றார்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய துறைநீலாவணையை சேர்ந்த என்.நவநீதராஜா லாகுகல பிரதேச செயலாளராக  இன்று (22) கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதற்கு முன்னர் லகுகல பிரதேச செயலாளராக கடமையாற்றிய சந்தருவான் அனுருத்த அம்பாறை பிரதேச செயலாளராக அண்மையில் இடமாற்றம் பெற்று சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் லாகுகல பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராகவும் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், முன்னாள் லாகுகல பிரதேச செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts