(நூருல் ஹுதா உமர் )
பைத்துல் ஹெல்ப் சமூக சேவை நிறுவன ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் 21 ஆண்டு நிறைவின் நினைவாக அமைப்பின் தலைவர் ரைஸுல் ஹக்கீமின் தலைமையில் மருதமுனையில் துஆ பிராத்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பைத்துல் ஹெல்ப் சமூக சேவை நிறுவன முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு குர்ஆன் மதரஸாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் நினைவாக அல்-குர்ஆன் பிரதிகளும் கையளிப்பு செய்தனர்.