பிராந்தியம் | பொருளாதாரம் | 2021-09-14 12:30:57

அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபையின் விலை நிர்ணய வேலைத்திட்டத்திற்கு பட்டதாரி பயிலுனர்கள்

ஏ.பி.எம்.அஸ்ஹர், நூருல் ஹுதா உமர்

கொவிட்-19 நிலைமையைப்பயன்படுத்தி விலைவாசியை அதிகரித்து பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கும் வியாபாரிகளைக் கண்காணிக்கும் பொருட்டு பிரதேச செயலக மட்டத்தில் பட்டதாரி பயிலுனர்கள் சிலரை நுகர்வோர் அதிகாரசபையின் விலை நிர்ணயம்  தொடர்பான வேலைத்திட்டங்களில் தற்காலிகமாக இணைக்கும் நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்தில்  தற்போது இடம் பெற்று வருகின்றன.

காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் ஆகியோர் இவர்களுக்கான  நியமனக்கடிதங்களை நேற்று(13)  வழங்கி வைத்தனர்.

உதவி பிரதேச செயலாளர் திரு எஸ் பாத்தீபன், இதில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி ஹாஜா முஹம்மத் நபார் மற்றும் பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களும் கலந்து கொண்டார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts