பிராந்தியம் | மருத்துவம் | 2021-09-05 11:45:36

சாய்ந்தமருதில் தேவையின்றி வீதிகளில் நடமாடிய 37 நபர்களுக்கு கொவிட் பரிசோதனை; 03 பேருக்கு தொற்று உறுதி.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அணியினரால் இன்று வெள்ளிக்கிழமை 20 நபர்களுக்கு PCR பரிசோதனையும் மேலும் 17 நபர்களுக்கு அண்டிஜென் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அண்டிஜென் பரிசோதனையில் 3 பேர் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர். 20 பேரின் PCR முடிவுகள் நாளை கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள். கொரோணா ஆட்கொள்ளி என்பதை ஒருபோதும் மறந்து விட வேண்டாம்" என்று எச்சரிக்கிறது சாய்ந்தமருது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts