ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் (30.08.2021) சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் வருகை தந்து சினோபாம் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மக்கள் ஆர்வத்துடன் தமது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வருகை தந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எதிர்வரும் வியாழக்கிழமை வரைக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நிலையங்களில் இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.