விளையாட்டு | விளையாட்டு | 2021-07-31 00:54:47

கல்முனை பிரதேச செயலகத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முனனிட்டு உடற்பயிற்சி

(சர்ஜூன் லாபிர், எம்.என்.எம்.அப்றாஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)


தேசிய விளையாட்டு தினத்தை முனனிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி திறனை விருத்திசெய்யும் வகையில் ஏற்பாடு செய்த  உடற்பயிற்சி கல்முனை பிரதேச செயலக வளாகத்தில்  (30.07.2021) நடைபெற்றது.
 
கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான், கிராம சேவை  நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.பதியூத்தீன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்க யூ.எல் ரமீஸ், உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸீம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.என்.சபாயி ஆகியோரின்  நெறிப்படுத்தலில் இந்த பயிற்சி இடம்பெற்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts