பிராந்தியம் | மருத்துவம் | 2021-07-14 16:24:51

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்,எம்.எம்.ஜாபிர்,சர்ஜூன் லாபிர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப் ரஹ்மான் தலைமையில் நேற்று(13) நடைபெற்றது.  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த உபகரணங்களை கையளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார அமைச்சுக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க  சுகாதார அமைச்சின் ஊடாக இந்த உபகரணங்கள் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 இதன்போது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts