(ஹுதா உமர்)
சௌபாக்கியா சமுர்த்தி வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி பயனாளி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சமுர்த்தி வங்கியினால் வாழ்வாதார கடன்கள் வழங்கும் நிகழ்வு (06) செவ்வாய்கிழமை சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.றிபாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன்களை வழங்கி வைத்தனர்.