உள்நாடு | பொருளாதாரம் | 2021-07-08 00:24:04

நாவிதன்வெளியில், "சௌபாக்கியா சமுர்த்தி வாரத்தை" முன்னிட்டு விசேட நிகழ்வுகள்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்,முஜாஹித்)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் "சௌபாக்கியா சமுர்த்தி வாரத்தை" முன்னிட்டு பயனாளிகளிடம் (07)கையளிக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டங்களை  கையளித்தார். இதன்போது சமுர்த்தி உதவி மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் , சுயதொழில் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்திற்கு கடன் உதவிகள், இலவச மின் இணைப்புக்ள்   போன்ற வேலைத்திட்டங்கள்  பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

சுகாதார வழிகாட்டல் மற்றும் நடை முறைக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ். சிவம், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் பிரதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts