உள்நாடு | அபிவிருத்தி | 2021-07-07 11:19:30

கல்முனையில் சேதன பசளை உற்பத்தி தொடர்பில் செயலமர்வு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

சுபிட்சத்தின் நோக்கு  தேசிய வேலைத்திட்டத்தின்

கீழ்
நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேம்படுத்தும் முகமாக இயற்கை முறையிலான சேதனப் பசளை உற்பத்தியினைஊக்குவிக்கும் திட்டங்கள்  நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது

இதறகமைய  வீட்டு தோட்டத்தில்சேதனப் பசளை உற்பத்தி முறைகள் பற்றிய செயலமர்வு கல்முனை  பிரதேசத்தில் நேற்று (06)இடம்பெற்றது

கல்முனை பிரதேச செயலகத்தின்
இஸ்லாமாபாத் கிராம சேவகர் பிரிவில் உள்ள 

சமூர்த்தி பெறும் குடும்பங்களை ஊக்குவிக்கும் முகமாக கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்செயலமர்வு சமூர்த்தி உத்தியோகத்தர் ஐ. எல். அர்ஸதீன் அவர்களின் ஒருங்கிணைப்பில்
கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி 
தலைமை பீட முகாமையாளர்  
எ. ஆர். எம். சாலிஹ் 
தலைமையில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் பிரதான 
வளவாலராக
 கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் போதனாசிரியர் 
என் . யோகலகஷ்மி
அவர்கள் கலந்து கொண்டு வீட்டு 
தோட்டத்தில் 
சேதன பசளை உற்பத்தி மற்றும் அதன் பயன்கள் தொடர்பில்விரிவாக 
விளக்கமளித்தார்.

மேலும் இதன் போது சேதன பசளை தொடர்பில்,
கலந்து கொண்டவர்கள் தங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில்  
கேட்டறிந்து கொண்டு பயன்பெற்றனர் அத்துடன் தாம் சேதன பசளை உற்பத்தி செய்ய ஆர்வத்துடன்
உள்ளதாக கலந்து கொண்ட பயனாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
சிரேஸ்ட கருத்திட்ட முகாமையாளர் 
எம். எஸ். நயிமா உட்பட சமுர்த்தி 
வலய உதவி முகாமையாளர் 
எஸ்.  எல். அசீஸ் , பிரதேச கருத்திட்ட உதவியாளர் எ. எஸ். எம். ஜவ்பர்,
சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் 
இதன் போது கலந்தகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts