உள்நாடு | மருத்துவம் | 2021-07-07 11:11:00

 ஆசிரியர்களுக்கான கொவிட் தடுப்பூசி ஆரம்பம்     

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி , நாளைய தினம் முதல் எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இந்த திட்டத்தை செயற்படுத்தி நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு கூறுகின்றது.நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 20 கல்வி சார் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதற்கமைய , இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோருக்கும் கொவிட் தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படவுள்ளது.மேலும் , குறித்த மூன்று நிறுவனங்களிலும் சுமார் 2000 பேர் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts