பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-07-05 15:56:01

அரசாங்கத்தினால், மருதமுனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பொதிகள் வழங்கிவைப்பு.

(சர்ஜூன் லாபிர், ஜெஸ்மி எம். மூஸா, ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை தெற்கு சுகாதார பிரிவிற்குட்பட்ட மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு கடந்த 02 திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக தேசிய கொரோனா தடுப்பு மத்திய நிலையத்தினால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் குடும்பங்களுக்கு 10000.00 ரூபா பெறுமதியான நிவாரண பொதிகள் இன்று (05.07.2021) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன.

சுகாதார சட்ட விதிமுறைகளுக்கு அமைய தோற்றாளர்களின் நுளைவாயிலடியில் குறித்த நிவாரணப் பொதிகள் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டன.

இதில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ், சமூர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன், கிராம சேவகர் நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல் பத்துருத்தீன், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸீன் பாவா, கிராம சேவையாளர் எம்.எஸ்.கையூம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts