ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பிரதி தலைவர் சர்மில் ஜஹான் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி பொறுப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் குழு உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ W.D வீரசிங்க அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழைய மாணவர் சங்கதின் சார்பில் அதன் பிரதி தலைவர் சர்மில் ஜஹான், பொதுச்செயலாளர் சுஹைல் ஜமால்தீன், பிரதி செயலாளர் முஹம்மட் றியாஜத், மத்திய கிழக்கு கிளை சார்பாக முஹம்மது சமீர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
செயலாளர் சுஹைல் ஜமால்தீன்; ஷம்ஸ் மத்திய கல்லூரியினை இலங்கை நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000+ ஆக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளீர்ப்பு செய்தமைக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் அதனை உறுதிப்படுத்திய அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ WD வீரசிங்க அவர்களுக்கும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் SM ஜெஸீல் ஆசிரியர் அவர்கள் ஆரம்பம் முதல் செய்த உதவிகளுக்கு SM ஜெஸீல் அவர்களுக்கும் நன்றியை நேரடியாக தெரிவித்ததுடன் பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி பொறுப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களுக்கும் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் றிஸ்லி முஸ்தபா அவர்களின் பிரத்தியேக செயலாளரும், மொழி பெயர்பாளரும் பல்வேறு வகைகளில் பாடசாலை தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அல்-ஜவாஹிர் அவர்களுக்கும் விசேட நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற இரத்ததான நிகழ்விலும் ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்