தொழில் திணைக்களத்தின் பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களுக்கான மக்கள் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதியை (EPF) பெற்றுக் கொள்வதற்காக தலைமை அலுவலகத்திற்கு வருகை தருவோர் labourdept.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமக்கான நேரம் மற்றும் திகதியை முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.