உள்நாடு | சமூக வாழ்வு | 2021-04-29 21:30:48

சுகாதார வைத்திய அதிகாரியின் சேவைக்கு இடையூறு; கருத்தை விமர்சித்து பள்ளிவாசலில் துண்டுப்பிரசுரம். 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் . குணசிங்கம் சுகுணன் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை விமர்சித்து சாதரண மக்கள் மத்தியில் வைத்திய அதிகாரியின் கருத்தையும், குறித்த உள்ளுர் ஊடக சமூக வலைத்தளத்தையும் இனவாத சாயம் பூசி சேவைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்  பள்ளிவாசலின் பல பகுதிகளிலும் துண்டு பிரசுரமாக ஒட்டிய சம்பவமொன்று மருதமுனை - பெரியநீலாவணை  மஸ்ஜிதுல் ஹூ தா பள்ளிவாசலில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

குறித்த பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தலைவரே  இதனை செய்ததாகவும், அவரே இதனை பிரிண் எடுத்து ஒட்டுமாறு தனக்கு வழங்கியதாகவும் பள்ளிவாசலில் கடமையில் ஈடுபடும் முஅத்தீன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிவாசல் தலைவராக செயற்படும் குறித்த நபரோடு உறுப்பினர்கள் சிலர் முரண்பட்டுள்ளனர். அத்துடன் தனிப்பட்ட முகநூல் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களை தயவுசெய்து பள்ளிவாசல்களில் ஒட்டி மக்களை பிழையாக வழி நடத்த வேண்டாம். எனவும் குறித்த நிர்வாக சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts