மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு உடனடி அன்டிஜன்
(Antigen) பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று மதியம் 12 மணி முதல் குறித்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.