உள்நாடு | சமூக வாழ்வு | 2021-04-14 00:15:16

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ. காதர் தெரிவு

றாசிக் நபாயிஸ்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய தலைவராக கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ. காதர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சம்மேளனத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் இன்று (13) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது, வெலிவோறியன் கிராமத்திலுள்ள எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் முன்னாள் தலைவர் கலாபூசணம் மீரா.எஸ். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. மருதமுனையைச் சேர்ந்த பி.எம்.எம்.ஏ.காதர் தலைவராகவும், சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஜே.எம். ஹனீபா செயலாளராகவும், கல்முனையைச் சேர்ந்த யூ.எல்.எம்.இஸ்ஹாக் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

முன்னாள் தலைவர் மீரா. எஸ். இஸ்ஸடீன், கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் எம்.எல்.எம்.ஜமால்டீன் ஆகியோர் சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இதன்போது,  சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், ஊடகவியலாளர்களான எஸ்.கார்த்திகேசு மற்றும் பி.முகாஜரீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts