(ஏ.எல்.எம்.ஷினாஸ் )
பெரியநீலாவணை புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயத்தில் 1999 ஆம் ஆண்டு கல்விப் பயணத்தில் இணைந்த வகுப்பறை நண்பர்கள் ஒன்றிணைந்து "நண்பர்களின் சமூக இணைப்பு" (Social Link of Friends Together - SLOFT) எனும் சமூக சேவைகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் மேலங்கி அறிமுகம் மற்றும் அங்குரார்பண நிகழ்வு என்பன அதன் தலைவர் அப்துல் காதர் சப்ரின் தலைமையில் மருதமுனை Blue C பீச் ஹேட்டலில் இன்று (06) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் 35 பேர் பங்கு கொண்டனர். மேலும் அமைப்பினால் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய சேவைகளும் எதிர்கால திட்டமிடல் மற்றும் இதர செயற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டன. இறுதியில் இராபோசன விருந்தோடு நிகழ்வு நிறைவு பெற்றது.