கல்வி | கல்வி | 2021-02-18 20:23:46

புலவர் மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

பெரியநீலாவணை புலவர் மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில் (15) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்த கொண்டார்.

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தரம்-01 க்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வுகளில் பாடசாலையின் பிரதி அதிபர் எம் .சி.எம்.நசார், உதவி அதிபர் ஹஸ்மி மூஸா உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின்போது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts