(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021/2022 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்முனை நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (11) நடைபெற்றது.
இதன் போது கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக ஆரிக்க காரியப்பரும் பொருளாளராக எம்.ஜே. ஜவாட் நிஷாத் உட்பட 23 நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
எதிர்காலத்தில் கல்முனை பிரதேசத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.