கொரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை வரவேற்கிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
"கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முஸ்லிம்களை அனுமதிப்பதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நாங்கள் வரவேற்கிறோம்." என பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.