ஏ.எல்.எம்.ஷினாஸ்
நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின்போது பிரதேச செயலாளர் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து "சுபீட்சத்தின் நோக்கு" எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய பயன்தரும் பழ மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி லதாகரன், நிர்வாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.