மியன்மாரின் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சி தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் 2020 நவம்பர் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது.
இருப்பினும் இந்தத் தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது மியன்மாரின் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மியன்மாரில் இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறும் இராணுவம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.