மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
´ நேற்று நான் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார துறை நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடினேன். அனைத்தும் விடயங்களையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளோம். என்ன செய்வது என்று. என அமைச்சர் தெரிவித்தார்.