(எம்.என்.எம்.நாஜித், ஏ.எல்.எம். ஷினாஸ்)
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக மருதமுனை சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னாள் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் 'கபன் சீலை போராட்டம்' ஒன்றை இன்று (14.12.2020) முன்னெடுத்தனர்.
மாற்றத்திற்கான எழுச்சி முன்னணியின் பிரதான செயற்பாட்டாளர் சிரேஸ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி உட்பட சிவில் சமூகத்தினர் இதில் கலந்து கொண்டனர். ஆயல் கிராமங்களை சேர்ந்த தமிழ் சகோதரர்களும் இந்த கபன் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.