(ஏ.எச்.எம்.ரிகாஸ்)
இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் புதன்கிழமை அன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நியமனத்தை வழங்கி சாய்ந்தமருது மண்ணை கௌரவப்படுத்திய மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களுக்கும், சிபாரிசினை மேற்கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கும் ஏ.எல்.எம்.சலீம் ஊடகப் பிரிவு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அத்துடன், தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் மற்றும் ஏனையோருக்கும் எமது ஊடகப் பிரிவு நன்றிகளை கூறிக் கொள்கின்றது.
மேலும், இந்நியமனத்தினூடாக நமது சமூகத்திற்கு பல்வேறு நற்பணிகளைச் செய்ய சித்தமாகவுள்ள சலீம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.