இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்கள் இவ்வாறு நிதி அமைச்சரிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சார சபையின் பயன்பாடுகள் குறித்து குறித்த ஆணைக்குழுவினால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.