-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நேற்று (23) திங்கட் கிழமை மீன்டும் ஆரம்பிக்கப்பட்டன.
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலையத்தின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய பாடசாலைக்கு வருகை தந்ததுடன் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டு பாடசாலை வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கல்விப்பொதுத் தராதர சாதரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கற்பித்தல் செயற்பாடுகளும் வகுப்பறைகளில் நடைபெற்றன.
சுகாதார விதிமுறைகளுக்கமைய அதிகளவிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைதந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.