(எம்.என்.எம்.அப்ராஸ்,ஹுதா உமர்)
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மீனவர்கள், வர்த்தகர்களுக்கான கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மீனவர்களுக்கான கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு மாளிகைக்காடு கடற்கரை வீதியில் இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர், சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் யூ.எல்.நூருல் ஹூதா, பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் உள்ளிட்ட போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் கல்முனை இணைப்பாளர் எம்.வை.எம்.நிப்ராஸ், மாளிகைக்காடு மீனவர் சங்க தலைவர் எம்.ரீ.எம்.நெளசாத், என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு மாளிகைக்காடு மீனவர் சங்கத்தின் பங்குபற்றலுடன் இடம் பெற்றது.
இதன்போது கொவிட் 19 சுகாதார வழிமுறை பற்றிய விழிப்புணர்வு ஸ்டிக்கர், துண்டுப் பிரசுரம், நோய் எதிர்ப்பு ஆயுர்வேத பானம் மற்றும் முகக்கவசம் என்பன மீனவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.