கல்முனை கிரீன் ஃபீல்ட் திட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கூரிய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபரொருவரை கல்முனை பொலிசார் இன்று (22) கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்தபோது கூரிய வாள் மற்றும் நீளமான கத்தி என்பன ரகசியமான முறையில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மீட்டெடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சந்தேக நபரும் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.