(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
இலங்கையின் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சமூக சேவைகளை அணுகும் மற்றும் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி இலக்கை அடைதல் எனும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சி.பி.எம். நிறுவனமானத்தின் அனுசரணையில் இலங்கை நவஜீவன தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டம் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கான அமைப்பின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்த இரு நாள் வழிகாட்டல் செயலமர்வு கடந்த இரண்டு தினங்களாக கல்முனை கிரிஸ்தா இல்ல வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட நவஜீவன அமைப்பின் இணைப்பாளர் ரி.டி.பத்ம கைலநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள
வலுவிழப்புடன் கூடிய நபர்களின் பிரதிநிதிகள் 56பேர் கலந்து கொண்டனர்.
நவஜீவன அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் சுகாதார மற்றும் புனர்த்தான விடயங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் எச்.ஆர்.பிரசங்க சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வின் பிரதான வளவாளர்களாக
வலுவூட்டல் நிகழ்வுக்கான வளவாளர் தர்மலிங்கம் கணேஸ் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். இதன் போது வலுவிழப்புடன் கூடிய அமைப்புக்களின் செயற்பாடுகள், அதன் நிர்வாக முறைகள், பிரச்சினைகளை கையாழுதல், வளங்களை திரட்டும் செயல்முறைகள், சமூக மட்ட குழுக்களுக்கு உள்ள ஆயத்த நிலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் வலுவிழப்புடன் கூடிய அமைப்புக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.