உள்நாடு | அரசியல் | 2020-09-11 14:45:18

சாய்ந்தமருதில் வரவேற்பு நிகழ்வும் கௌரவிப்பு விழாவும்

(அபு ஹின்ஸா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், கிழக்கு மாகாண ஆளுனரை வரவேற்கும் நிகழ்வும் கல்முனை தொகுதியின் சார்பில் எதிர்வரும் 15 ம் திகதி இடம்பெறவுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா ஜகம்பத், யானை வேலிகள் அமைத்தல் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டவலியு. டீ.வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts