எம்.எஸ்.ஆதிக்
பெற்றோர் , அதிபர்,ஆசிரியர் குழாம் , SDCEஉறுப்பினர்களின் ஏற்பாட்டில் அல் - மினாரா வித்தியாலயத்தில் கடமையாற்றி அதிபர் சேவையில் ஓய்வு பெற்று செல்லும் எஸ்.ஆதம்பாவா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு அல்- மினாரா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஏ. எல்.பாத்திமா டில்சா றோஸ் தலைமையில் இன்று (27) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.முஹம்மட் காசிம் கௌரவ அதிதிகளாக ஆரம்பப் பிரிவு உதவி கல்விப் பணிப்பாளர் எஸ் .அம்ஜத்கான் மற்றும் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி மற்றும் PSI இணைப்பாளர் யு.எல்.இஸ்திகீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் ஓய்வு பெற்று செல்லும் அதிபருக்கு ஆசிரிர்களாலும் , பெற்றோர்களாலும் மாணவர்களாலும் கௌரவிப்பு நிகழ்வும் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது மாணவ , மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது