(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் நிருவாக சபை ஏற்பாடு செய்த புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (01.08.2020) பள்ளிவாசலில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தை விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.ஏ அன்சார் மௌலானா நிகழ்த்தினார். சுகாதார திணைக்களத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய பொதுமக்கள் வீடுகளிலிருந்து வுழு செய்து கொண்டு பள்ளிவாசலுக்கு வருகைதந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.